யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கணேசபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் கருணாநிதி அவர்கள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,தங்கராணி அவர்களின் அன்புக் கணவரும்,கிருஷ்ணபாலன், விஜயகெளரி, சுரேஸ் குமார், கலைச்செல்வி ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற தவமணிதேவி, ஞானலீலா, காலஞ்சென்ற நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற முருகேசு, பாலசிங்கம், இராசதுரை ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,ஜெயந்தி, காலஞ்சென்ற சந்திரமோகன், சோபா, அன்ரனி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,தர்மீகன், செந்தனேஸ்- அஷ்வினி, செங்கரன், சங்கவின், அபினயா, ஆதீசன், பவிதிகா, காலஞ்சென்ற கிருஷாயினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 12-04-2024 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இல.44/1, கணேசபுரம், கிளிநொச்சி என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment