யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி ஆறுமுகம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை குமாரசாமி அவர்கள் 29-02-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ஐயாத்தப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகமணி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும், பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
உதயகுமார்(உதயன்- ஜேர்மனி), பாலமனோகரன்(பாலன்- ஜேர்மனி), லோஜினி(லோஜி- வட்டக்கச்சி), ராஜினி(ராஜி- ஜேர்மனி), சத்தியராஜ்(சத்தியன்- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, தங்கம்மா ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான மார்கண்டு, முத்துப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும், மயில்வாகனம், யோகலட்சுமி, நடராசா, காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, லக்ஸ்மி மற்றும் காமாட்சி, காலஞ்சென்ற பத்மநாதன், பேரம்பலம், நல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திலகவதி(ஜேர்மனி), பிறேமினி(ஜேர்மனி), லோகநாதன்(வட்டக்கச்சி), சிவனேசன்(ஜேர்மனி), டசானி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சஜீவன், தர்சன், ஜனோஜன், தாரணிகா, பிரவிகா, அபிசனா, அக்சயன், விபுஷன், அபிசன், அக்சயா, ஆரணியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-03-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment