திருமதி கந்தசாமி சிவமலர்
யாழ். கரவெட்டி துன்னாலை மத்தி கோவிற்கடவை வீரநாந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவமலர் அவர்கள் 04-05-2024 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,சுதர்சினி, சுபாசினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பாஸ்கரன், துவாரகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,மீரா, மீனா, மாதுளா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,தவராசா, கமலராணி , முருகேசபிள்ளை(தங்கன்), கலாவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,தவமலர் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,கிருஸ்ணதாசன், இரஞ்சினி, சிவமலர், காலஞ்சென்ற திருச்செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்ற ஜெயராயசிங்கம் மற்றும் சிவநேசராயசிங்கம், புஸ்பராணி, இந்திராணி ஆகியோரின் மைத்துனியும்,திலகவதி, சந்திரலீலா, காலஞ்சென்றவர்களான இராமகிருஸ்ணன், அருளாணந்தம் ஆகியோரின் அன்புச் சகலியும்,அனித்தா, கீர்த்திகன், விதுஷன் ஆகியோரின் அன்பு மாமியும், கோபிராஜ், துவாகரன், திவாகரன், நிலானி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்