யாழ். நாவற்குழி ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா சண்முகராசா அவர்கள் 07-01-2023 சனிக்கிழமை அன்று கிறிஸ்துவுக்குள் நித்திரை அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராசா தங்கராசா தம்பதிகளின் அன்பு மகனும், ஜெயராசா இராஜேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,மொறின் நிஷாந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,நிதர்ஷன், சஜீவன், வாகீசன், மதுஷன், பிரசாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தங்கராசா, சந்திரகலா, இந்திராதேவி, கௌரிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,செரின் சுபோதினி(கனடா), அன்ரன் ரவீந்திரன்(ஜேர்மனி), யூட்லக்ஸ்மன்(வவுனியா வைத்தியசாலை), டொறின் லக்சி, அன்ரனி ராஜ்குமார்(கனடா), மதன்குமார், சாமினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இரங்கல் திருப்பலி 09-01-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளாவில் நாவற்குழி அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்று பூதவுடல் சேமக்காலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
திரு செல்வராசா சண்முகராசா

பிறப்பு : 15/12/1972
இறப்பு : 07/01/2023
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
வீடு- குடும்பத்தினர் | Sri Lanka | +94775927326 |
0 Comments - Write a Comment